அச்சத்தில் மக்கள் - அமைச்சர் வெளியிட்ட தகவல்
Food Shortages
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
உணவு அல்லது அரிசி தட்டுப்பாடு
இலங்கையில் ஒருபோதும் உணவு அல்லது அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த மஹா பருவத்தில் பெறப்பட்ட நெல் அறுவடை இன்னும் நான்கு மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும் எனவும், அடுத்த ஒரு வருடத்தில் கிடைக்கும் அறுவடை இன்னும் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி அடுத்த எட்டு மாதங்களுக்கு நெல் கையிருப்பு நாட்டில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அச்சத்தில் மக்கள்
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதையடுத்து, மில் உரிமையாளர்களும், களஞ்சியப்படுத்துவோரும் நெல் இருப்பை மறைக்க முயல்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி