திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை

Sri Lankan Tamils Trincomalee
By Vanan Sep 17, 2023 02:45 PM GMT
Report

தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி வாகனத்தின் மீது சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய கொடுந்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் சோழன் மு. களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள  கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “தியாக தீபன் திலீபனின் ஊர்தி பவனி வாகனத்தின் மீது சிங்கள இனவெறிக் கும்பல் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தது.

இனவெறிக்கும்பலின்  கொடுந்தாக்குதல்

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

பன்னாட்டு அளவில் ஐ.நா. முன்பு பெரும் கவனயீர்ப்பு மாநாடு நடந்தேறுகிற இந்த நேரத்தில், இது போன்ற கொடுந்தாக்குதல்களை இலங்கை சிங்கள இனவெறிக்கும்பல் நடத்துவது கவனம் கொள்ளத்தக்கது.


இன்னும் தாயகத்தின் நிலை என்னவென்பதை தெரியப்படுத்தும் நிலை இது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் சிங்களர்களின் இனவெறியைக் கண்டித்து 12 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த திலீபனின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக இந்த ஊர்தி பவனி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதல் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இன்னும் சிங்களர்களின் இனவெறி அடங்கவில்லை என்பதே!

இந்நிலையில் திருகோணமலை கப்பல்துறை பகுதியில் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை இன்று ஊர்திப் பவனி வந்துள்ளது, அங்கு இலங்கையின் தேசியக் கொடியுடன் வந்த சிங்களக் காடையர்கள் ஊர்திப் பவனி மீது தாக்குதல் மேற்கொண்டு, தியாக தீபத்தின் உருவ படத்தினையும் அதில் கலந்து கொண்ட தமிழர்களையும் தாக்கியுள்ளனர்.

இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா : சீமான் ஆவேசம்

இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா : சீமான் ஆவேசம்

இராணுவம், காவல்துறை முன்னிலையில்

இந்தத் தாக்குதல் சிங்கள இராணுவம், காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. அதன் காணொளி காட்சியை கண்ட போது நெஞ்சம் பதைக்கிறது.

திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை | Thileepan Vehicle Attack Trinco

சர்தாபுர பகுதியில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் கற்களை நடுவீதியில் போட்டு, வீதியை வழிமறித்துள்ளனர். அந்தப் பகுதியில் காவல்துறையினர், இராணுவம், புலனாய்வுத்துறையினர் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

யாரும் இத்தாக்குதலைத் தடுக்கவில்லை. முகத்தை கருப்புத்துணியால் கட்டிய சிங்கள இளைஞரொருவன் பெரிய கல்லினால் வாகனத்தை தாக்கும் காட்சி நம்மை நடுங்க வைக்கிறது.

தொடர்ந்து வாகனம் முன்னேறிய நிலையில், வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி காத்திருந்த, ஆண்களும், பெண்களும் நிறைந்திருந்த கூட்டம், வாகனத்தை சுற்றிவளைத்து, தடிகளால் அடித்து தாக்குவது வேதனைக்குரியது.

சிங்கள மக்களுக்குள் இருக்கும் இனவெறி என்றுமே மாறாது என்பதை இந்நிகழ்வு மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பித்து, ஊர்தியை திருப்பி அருகிலுள்ள தம்பலகாமம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில், அங்கேயே தங்கியுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்கள் உயிர்பிழைத்ததே பெருஞ்செயல்.

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனிமீது காடையர் குழு தாக்குதல்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனிமீது காடையர் குழு தாக்குதல்

பேரினவாத அரசு பின்புலத்தில்  

இலங்கை பெளத்த சிங்கள பேரினவாத அரசு பின்புலத்தில் இருந்து கொண்டு இந்த கொடுந்தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை | Thileepan Vehicle Attack Trinco

மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன அங்கே எப்படி இருக்கும் என்பதை சர்வதேச சமூகம் இதன் வழியாகவாவது புரிந்து கொள்ளட்டும்.

சிங்கள மக்களோடு, தமிழ்மக்கள் எந்த காலத்திலும் இணைந்து வாழவே முடியாது என்பதே இந்த கொடுஞ்செயல்கள் நமக்கு காட்டும் படிப்பினை!

இந்தத் தாக்குதல்களை ஐ.நா. கவனயீர்ப்பு மாநாட்டுக் குழுவினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி