விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல் - கமல் குணரத்ன
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் உள்ள மறைமுக ஆதரவுக் குழுக்களால் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதற்கு வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என அவர தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் “இலங்கையின் பாதுகாப்புக் கொள்கை கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம்” என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன உள்நாட்டு மதத் தீவிரவாதத்தின் மீது தாக்கம் செலுத்தும் நாடு கடந்த தீவிரவாதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
