இளைஞர் குத்திக்கொலை :மூவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை
Sri Lanka Magistrate Court
Death Penalty
Murder
By Sumithiran
வலஸ்முல்லவின் மெதகன்கொட பகுதியில் நடந்த நிகழ்வொன்றில் 30 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றதற்காக தங்காலை உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க இன்று(27) மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்தார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கத்தியால் ஒருவரைக் கொன்றதாக மானதுங்க சிறில், பொத்தல கமகே சாந்த குமார மற்றும் சிங்கப்புலிகே ஜெயதிலக ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கத்தியால் குத்தி கொலை
2011 டிசம்பர் 1 ஆம் திகதி வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் நடந்த இதுல் கட்டகேம விழாவில் கலந்து கொள்ளச் சென்ற வலஸ்முல்ல, பன்சலகொடவில் உள்ள பிரதீப்பின் வீட்டில் வசிக்கும் 30 வயதுடைய சுது ஹகுருகே இந்திக சமன் குமார என்பவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி