கொழும்பு தேசிய வைத்தியசாலை வாகனத் தரிப்பிடத்தில் திருட்டு
கொழும்பு தேசிய வைத்தியசாலை (Colombo National Hospital) வளாகத்திலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களுடையது என தெரியவந்துள்ளது.
திருட்டுச் சம்பவம்
வைத்தியசாலையின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் கடமையில் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் மருதானை (Maradana) காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லன (Rukshan Bellana) தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 14 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)