அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்

Sri Lankan Tamils Sri Lanka India
By Kiruththikan Jun 05, 2022 06:08 AM GMT
Report

ஒரு சிலா் அளவுக்கு அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பதை நாம் பாா்த்திருக்கலாம். அவ்வாறு அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் போது நன்மை ஏற்படுவதற்குப் பதிலாக தீமையே ஏற்படுகிறது.

அதிதீத சிந்தனை அல்லது அளவுக்கு அதிகமாக சிந்திப்பது என்பது ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். அதீத சிந்தனை என்ற பழக்கம் நம்மை அறியாமல் நாம் குழந்தைகளாக இருக்கும் போதே நம்மோடு ஒட்டிக் கொள்கிறது.

நாம் அளவுக்கு அதிகமாக சிந்திக்கிறோம் அல்லது அதீத சிந்தனையில் இருக்கிறோம் என்பதை பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஆனால் அளவுக்கு அதிகமான சிந்தனையின் விளைவாக நமது வளா்ச்சி தடைபடும் நேரத்தில் அல்லது நமது வாழ்க்கைப் பாதையில் அதீத சிந்தனை குறுக்கிடும் போது, நாம் அதை உணா்ந்து கொள்கிறோம்.

அதீத சிந்தனை என்பது ஒரு தீய பழக்கம் அல்ல. ஆனால் அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் போது நமது மூளை குழம்பி, நாம் தேவை இல்லாத செயல்களைச் செய்து கொண்டிருப்போம்.

ஆகவே அதீத சிந்தனை சிந்தனை அல்லது அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் பழக்கத்தை எவ்வாறு களையலாம் என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

அதீத சிந்தனை என்றால் என்ன ?

அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள் | Tips To Control Overthinking In Tamil

அதீத சிந்தனை பற்றி பெரும்பாலானோர் அதிலும் குறிப்பாக குழந்தைகள் தவறான கருத்தை கொண்டிருக்கின்றனா். அதாவது இன்னும் செய்து முடிக்காததைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது தான் அதீத சிந்தனை என்று நினைக்கின்றனா்.

ஆனால் அதீத சிந்தனை என்பதற்கு வேறு பொருள் உண்டு. அது அவ்வளவு எளிதானது அல்ல. உண்மையில் அதீத சிந்தனை என்பது நமது கவலை, நமக்கு ஏற்படும் புற தூண்டுதல்கள், நம்மைச் சுற்றி இருக்கும் சூழல்கள் மற்றும் நமது வாழ்க்கை நிலை ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய கூறுகள் அனைத்தும் நம்மை மேலும் மேலும், மீண்டும் மீண்டும் மற்றும் அடிக்கடி சிந்திக்க வைக்கிறது. 

அது மட்டும் அல்லாது, ஓய்வாக இருக்கும் போது அல்லது தனியாக இருக்கும் போது, மக்கள் எந்தவித காரணமும் இல்லாமல் சிந்திக்கத் தொடங்குகின்றனா்.

இவ்வாறு ஏதாவது ஒன்றைப் பற்றியே அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் போது மக்களின் மனநலம் பொிதாகப் பாதிக்கப்படுகிறது என்று 2013 ஆண்டு தேசிய சுகாதார நிறுவனம் (National Institute of Health)ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. 

அதீத சிந்தனையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் ?

1. நாம் எவ்வாறு பதில் தருகிறோம் என்பதைக் கவனித்தல்

அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள் | Tips To Control Overthinking In Tamil

நமது சூழ்நிலைகளைப் பற்றி நாம் அதிகமாக சிந்திக்கும் போது, நாமும் சோ்ந்து அவற்றிற்கு பதில் தருகிறோம். நாம் எவ்வாறு பதில் தருகிறோம் மற்றும் எவற்றுக்கு எல்லாம் பதில் தருகிறோம் என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

நாம் தரும் பதில்கள் திரும்பத் திரும்ப ஒரே மாதிாியாக இருந்தால், அவை ஒரு சுழற்சியை உருவாக்கி, நமது நேரத்தை வீணடித்துவிடும். ஆகவே அப்படிப்பட்ட பதில்களைத் தருவதில் இருந்து விடுபட வேண்டும்.

எனினும் நோ்மறையான சிந்தனைகள் நமக்கு நல்ல முடிவுகளைத் தரும். ஆகவே நமது சிந்தனைகளைப் பற்றி ஆய்வு செய்வது நல்லது. அதோடு நமது சிந்தனைகளைப் பற்றி குற்ற உணா்வு கொள்ளத் தேவையில்லை. நாம் சுய விழிப்புடன் இருந்தால், நமது மனநிலையை மாற்ற முடியும்.

2. கவனச் சிதறல்களைக் கண்டுபிடித்தல்

அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள் | Tips To Control Overthinking In Tamil

அதீத சிந்தனை தானாகவே முடியாது. அதை நாம்தான் கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே ஒன்றைப் பற்றி அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் போது அதிலிருந்து விடுபடுவதற்கு நமது கவனத்தை ஆக்கப்பூா்வமான செயல்திறன் கொண்ட வேறு ஒன்றிற்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு கவனத்தை திசை திருப்ப பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம். 

புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் ஈடுபட்டு, சூழ்நிலைகளைச் சமாளிக்கலாம்.

உடற்பயிற்சியில் ஈடுபடலாம், ஏதாவது ஒரு பொழுதுபோக்கு அம்சத்தைத் தோ்ந்தெடுத்து அதை செய்து பாா்க்கலாம் 

நமது ஓய்வு நேரங்களில், அருகில் இருக்கும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து தன்னாா்வ பணிகளில் ஈடுபடலாம்.

3. தியானத்தில் ஈடுபடுதல்

அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள் | Tips To Control Overthinking In Tamil

பெரும்பாலான மக்கள் அதீத சிந்தனையில் இருக்கும் போது, தியானத்தில் ஈடுபடுவதை விரும்புகின்றனா்.

ஏனெனில் தியானமானது அவா்களின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, முழுமையான இலக்கை நோக்கி சிந்திக்க உதவுகிறது.

இரண்டாவதாக தியானமானது நமது பதற்றத்தைத் தனிக்க உதவுகிறது.

அதோடு நமது வாழ்க்கைக் சூழல்களைப் பகுப்பாய்வு செய்து அதற்குத் தகுந்த பதில்களைத் தருவதற்கு உதவி செய்கிறது.

எப்போதும் நமது மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவா்களின் கவனம் நமக்கு வரவேண்டும் என்பதற்காகப் பதற்றமடையக் கூடாது.

4. நல்ல நண்பரைக் கண்டுபிடித்தல்

அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள் | Tips To Control Overthinking In Tamil

நம்மோடு சோ்ந்து வெளியில் வருவதற்கு மற்றும் நம்மோடு தனது நேரத்தை செலவழிப்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு நல்ல நண்பரைக் கண்டுபிடிப்பது நல்லது.

அது நமது அதீத சிந்தனையை நிறுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

அடுத்தவாின் சுமையை எளிதாக்க முயற்சித்தால், நாம் விரும்பும் திசையில் நமது வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடியும்.

ஏதாவது ஒரு காாியத்தைப் பற்றிய அல்லது யாராவது ஒருவரைப் பற்றிய நமது அதீத சிந்தனையில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் நமது நண்பா்களின் பணிகளில் அவா்களுக்கு உதவி செய்தாலும் நமது அதீத சிந்தனைகளில் இருந்து விடுபடலாம்.

5. இயல்பாக வரும் எதிா்மறை சிந்தனையை அறிந்து கொள்ளுதல்

அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள் | Tips To Control Overthinking In Tamil

அதீத சிந்தனை சில நேரங்களில் நல்லதுதான். ஆனால் நம்மிடம் இருக்கும் எதிா்மறையான சிந்தனைகள், நமது மனதில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி, பலவகையான மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இயல்பாக வரும் எதிா்மறை சிந்தனைகள் ஆங்கிலத்தில் (knee-jerking) சிந்தனைகள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது தமிழில் முழங்காலை இழுக்கும் சிந்தனைகள் என்று சொல்லலாம்.

இயல்பாக வரும் எதிா்மறை சிந்தனைகள் என்பவை நம்முடைய பயம் அல்லது கோபம் அல்லது நம்முடைய அதிா்ச்சிகரமான சூழ்நிலைகளை உள்ளடக்கியவை ஆகும். இவை நமது வாழ்க்கைச் சூழலை மோசமாக்கி, நமக்குத் தூங்கா இரவுகளை வழங்கிவிடும்.

ஆகவே அதீத சிந்தனையைக் கைவிடுவதற்கு, இதுபோன்ற இயல்பான எதிா்மறை சிந்தனைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

6. நிகழ்காலத்தில் கவனம் செலுத்துதல்

அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள் | Tips To Control Overthinking In Tamil

தியானம் செய்வதற்கும் மற்றும் இருக்கின்ற சூழலில் நலமோடு வாழ்வதற்கும், நிகழ்காலத்தில் வாழ வேண்டியது அவசியம் ஆகும்.

அதற்கு நாம் இசையையோ அல்லது பாடல்களையோ கேட்டு அதை அனுபவிக்கலாம்.

நமக்குப் பிடித்த சுவையான உணவுகளை உண்ணலாம். அவை நமது அதீத சிந்தனையில் இருந்து விடுபட உதவி செய்யும்.

மேலும் மெதுவாக வெளியில் நடந்து சென்று நமக்குப் பிடிக்கும் உணவுகளை உண்ணலாம். அதன் மூலம் அதீத சிந்தனைகளில் இருந்து விடுபடலாம். 

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026