இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
இலங்கையின் நாடாளுமன்றம், இன்று (20) முதல் 23ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று ஏனைய விடயங்களுடன் முக்கியமாக, கலால்(சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
இன்று காலை 09.30 முதல் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான மாலை 5.30 வரை நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.
விவாதிக்கப்படவுள்ள விடயங்கள்
காலை 9.30 முதல் 10 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் விவாதிக்கப்படவுள்ளதுடன் 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டள்ளதுடன் 11.30 முதல் 5.00 வரை உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகுறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.
மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளை (21), ஏனைய விடயங்களுடன், நிதிச் சட்டங்கள் தொடர்பான இரண்டு விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
மே 22ஆம் திகதி வியாழக்கிழமை, ஏனைய விடயங்களுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.
எதிரவரும் வெள்ளிக்கிழமை (23) , குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை (திருத்த) யோசனையின் இரண்டாம் வாசிப்பு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
