தேர்தலுக்கான நிதியை விடுவிக்காததற்கு காரணம் என்ன..!
இந்த ஆண்டுக்கான(2023) வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள வேளையில், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கி தேர்தலை நடத்துவது அரசின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (24) நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தும்போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரச செலவினத்தை ஒரு நாள் தேர்தலுக்கு பயன்படுத்தினால் அது பணம் விரயமாகாது.
ஜனநாயக விரோத செயல்
குறித்த நிதியை வழங்காதது ஓர் சிறப்புரிமை மீறலாகும். உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவைக் கூட வழங்கியுள்ளது. இதற்கேற்ப செயற்படாதது ஜனநாயக விரோத செயல்.
நிதியை வழங்கியவுடன் தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரச அச்சகம் கூட்டுத்தாபணம் தயாராக இருக்கும் போது, உரிய நிதியை விடுவிக்காததற்கு என்ன காரணம்.” என சஜித் பிரேமதாச பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வினவினார்.