உயிர்த்த ஞாயிறு விசாரணை: முக்கிய அரசியல் புள்ளி விரைவில் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னைய முக்கிய அரசியல் புள்ளியொருவர் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் வார இறுதியில் இது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் மேற்குறித்த முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று புலனாய்வாளர்களும் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் புள்ளி
அதன் பிரகாரம், ஆரம்பகட்டமாக இன்னும் ஒரு சில நாட்களில் குறித்த புள்ளியிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளக் காவல்துறை திணைக்களம் உத்தேசித்துள்ளது.

அதனையடுத்து குறித்த அரசியல் புள்ளி வழங்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |