கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
கனடாவில் (Canada) டொரன்டோவில் தட்டம்மை நோய் தொற்று தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொரன்டோவில் பல்பொருள் அங்காடி பகுதியில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி சென்றவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை நோய் தொற்று குறித்த இடத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில் டொரன்டோவின் பொது சுகாதார அலுவலகம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தட்டம்மை நோய் தொற்று
நோய் தொற்றுக்கு இலக்கானவர்கள் குறித்த பகுதியில் இருந்ததாகவும் இதனால் குறித்த இடத்திற்கு அந்த திகதியில் சென்றவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என டொரன்டோவின் பொது சுகாதார அலுவலகம் கூறியுள்ளது.
அத்துடன், நோய் தொற்றுக்கு இலக்கானவர்கள் சுவாசிக்கும் போதும் இருமும் போதும், தும்மும் போதும் அல்லது பேசும் போதும் இந்த நோய் தொற்று பரவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோய் தொற்றானது சுமார் 2 மணித்தியாலங்கள் வரையில் காற்றில் உயிர்ப்புடன் இருக்கக்கூடியவை சுகாதார நிபுணர்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியிலுள்ள மக்கள் உடனடி மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு டொரன்டோவின் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
