மட்டக்களப்பு எல்லைக்குச் சென்று திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்

Batticaloa Sonnalum Kuttram
By Independent Writer Aug 23, 2023 01:21 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிகளுக்கு தமிழர்களால் சென்று திரும்ப முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் (22) மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள கால் நடை பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தினைச் சேர்ந்த மும் மத தலைவர்களையும் அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்களையும் அந்தப் பகுதியில் செயற்படும் பௌத்த பிக்கு தலைமையிலான சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களினால் சுமார் நான்கு மணி நேரம் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவமானது ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்ட சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு மாவட்டத்தின் மூன்று சமயப் பெரியார்களையும் ஒரு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் சிறைப்பிடித்து வைத்து கொண்டு இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர், நீதிமன்ற சட்டங்களுக்கு சவால் விடும் நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் செயற்படும் போது பிடித்து வைக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற விதம் இந்த நாட்டில் பௌத்த மதத்தவரை தவிர வேறு எந்த மதத்தவருக்கும் பாதுகாப்போ நீதியோ கிடைக்காது என்பதையே மிக ஆழமாக பதிவு செய்திருந்தது.

மட்டக்களப்பு எல்லைக்குச் சென்று திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள் | Traditional Land Of Sri Lankan Tamils

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்காலம் குறித்து மாத்திரம் அல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 74 வீத பெரும்பான்மை தமிழர்களினது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் அவர்கள் வாழ்வதற்கான சுதந்திரம் குறித்தும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை எழுப்பி இருந்தது.

மீண்டும் யுத்த காலத்தை நினைவுபடுத்திய இனவாதம்

நேற்று பிக்கு மற்றும் அவர்களுடன் வந்த சிங்கள காடையர்கள் செயற்பட்ட விதம், அவர்கள் இந்து குருக்களின் கொண்டையை பிடித்து இழுத்தமை, மதகுருமார் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சாரதிக்கு அடிக்கச் சென்றமை, வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு பல மணிநேரம் மதகுருமார் கெஞ்சியும் சாவியை கொடுக்காது சுமார் 50 க்கு மேற்பட்டோர் சுற்றிவளைத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டு அவர்கள் பேசிய வார்த்தைகள் எல்லாம் இந்த நாட்டில் இனியும் சிறுபான்மை இன மக்கள் வாழமுடியாது என்ற உணர்வுகளையே பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கடிதம் எழுதச் சொல்லி அச்சுத்திய இனவாதிகள்


ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள், காணொளிகள் வெளிவந்தால் அந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத குடியேற்றம், சட்டவிரோத காடழிப்பு, குறித்த விபரங்கள் வெளிவரும் என்பதோடு அவர்களுடன் சேர்ந்து இயங்கும் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோத்தர்களின் சட்ட விரோத செயற்பாடுகளும் வெளிவந்து விடும் என்பதற்காக முழுக்க முழுக்க சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஊடகவியலாளர்களையே இலக்கு வைத்தனர்.

ஊடகவியலாளர்களை சுற்றி வளைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்த புகைப்பட கருவிகள், தொலைபேசிகளை பறிப்பதற்கு முயற்சி செய்ததோடு ஊடகவியலாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கடிதங்கள் எழுதி கையெழுத்து வேண்டியும் எடுத்தனர்.

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள் காணொளிகளை எங்கும் பிரசுரிக்க கூடாது என்று கூறி கடிதம் எழுதி கையெழுத்தும் வைக்க சொல்லி அச்சுறுத்திய சம்பவம் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025