நிறுத்தப்படும் யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை....! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
வடக்கு தொடருந்து சேவைகள் மீண்டும் ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது.
பிரதான தொடருந்து மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால் தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை தொடருந்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மில்லியன் அமெரிக்க டொலர்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஐந்து பாலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய கடன் உதவியுடன் ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ள தோடு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.
பொசன் பௌர்ணமி தினத்துக்கு பின்னர் கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 9127 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த தொடருந்து மார்க்கம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட போதிலும் சமிக்ஞை கட்டமைப்பின் கட்டுமானம் தாமதமாகி வருகிறது.
இந்தியாவுடன் ஒப்பந்தம்
சமிக்ஞைகள் இல்லாததால் தற்போது அந்த பகுதியில் டோக்கன் முறையில் தொடருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்திற்குள் சமிக்ஞை கட்டமைப்பின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பணிகளை முடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
