சிறப்பு தொடருந்து சேவைகள் இரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் சில இரவு நேர தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு(Colombo) தொடக்கம் பதுளை(Badulla) வரையும், பதுளை தொடக்கம் கொழும்புக்கு இடையில் இயங்கும் இரவு நேர சிறப்பு தொடருந்துகள் இன்று (26) மூன்றாவது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏனைய தொடருந்துகள் இன்று வழமைபோல இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள ரயில்
அத்தோடு இன்று கணேவத்தையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்து வலக்கும்புர பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையினால் குறித்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக 4 தொடருந்து சேவைகள் தாமதமடையக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        