தமிழர் தலைநகரில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்
Sri Lanka Police
Trincomalee
Drugs
By Jaso
தமிழர் தலைநகரில் போதைப்பொருள் வைத்திருந்தார் எனத் தெரிவித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினராலேயே இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலாவெளி காவல்துறை பிரிவில் கடமையாற்றிய
இவ்வாறு கைது செய்ய்பட்டவர் திருகோணமலை, நிலாவெளி காவல்துறை பிரிவில் கடமையாற்றிய உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய காவல்துறை உத்தியோகத்தர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருளுடன் கைது செய்யப்படும்
இதேவேளை அண்மைக்காலமாக போதைப்பொருளுடன் காவல்துறை மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
