ஈரான் போருக்கு உதவ மறுத்த ஸ்பெயின் : ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு அமெரிக்கப் படைகள் ஸ்பானிஷ் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்காததற்காக ஸ்பெயின் மீது முழு வர்த்தகத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"ஸ்பெயின் மிகவும் மோசமாக செயல்படுகிறது" என்றும், ஸ்பெயினுடனான "அனைத்து உறவுகளையும் துண்டிக்க" அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசண்டிடம் கூறியதாகவும் ட்ரம்ப் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அனைத்து வர்த்தகத்தையும் நாங்கள் துண்டித்து வருகிறோம்
"ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் நாங்கள் துண்டித்து வருகிறோம், ஸ்பெயினுடன் நாங்கள் எதையும் விரும்பவில்லை" என்று அவர் மேலும் கூறினார்,

இதேவேளை ஈரான் மீதான குண்டுவீச்சு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஸ்பெயினுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தை துண்டிக்க டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களுக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பதிலளித்துள்ளார்.
இன்று(04) புதன்கிழமை காலை தொலைக்காட்சியில் உரையாற்றிய சான்செஸ், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை "போர் வேண்டாம்" என்ற வார்த்தைகளுடன் சுருக்கமாகக் கூறலாம் என்று குறிப்பிட்டார்
ஸ்பெயின் பிரதமரின் பதிலடி
2003 ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பைக் குறிப்பிட்ட அவர், "கடந்த கால தவறுகள்" மீண்டும் நிகழக்கூடாது என்று அழைப்பு விடுத்தார். இது அதன் இலக்குகளை அடையவில்லை என்றும், பாதுகாப்பின்மையை உருவாக்கி பலரின் வாழ்க்கையை மோசமாக்கியது என்றும் அவர் கூறினார்.

ஈரான் மீதான தாக்குதல்கள் மில்லியன் கணக்கான சாதாரண மக்களுக்கு இதேபோன்ற பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் சான்செஸ் கூறுகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |