ஈரான் மீதான போர் : அமெரிக்க பாதுகாப்பு செயலர் மீது பழிபோடும் ட்ரம்ப்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதல் நான்காவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், போர் எவ்வாறு தொடங்கியது என்பது தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்த முதல் மூத்த அதிகாரிகளில் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத்தும் ஒருவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மெம்பீஸ் நகரில் நடந்த வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது:
பாதுகாப்பு செயலாளர்தான் காரணம்
ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியவர் பாதுகாப்பு செயலாளர்தான். மத்திய கிழக்கில் ஒரு பிரச்னை உள்ளது. அதை இப்போது தீர்க்கலாமா தள்ளிப்போடலாமா என்று நான் கேட்டேன்.

ஈரானை அணுகுண்டு தயாரிக்க அனுமதிக்க கூடாது தாக்குவோம் என பீட் ஹெக்செத் தான் கூறினார்.இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
இந்த மோதல் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. சிலர், இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல்களைத் தொடங்கத் தயாராக இருந்ததாகவும், அதுவே இறுதியில் அமெரிக்காவை இதில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகின்றனர்.
மற்றவர்களோ, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலைக்கு மிக அருகில் இருப்பதாகக் கூறப்படும் கவலைகள், இந்த மோதல் தீவிரமடைவதைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகித்ததாக வாதிடுகின்றனர்.
ட்ரம்பின் முரண்பாடான விளக்கங்கள்
முன்னதாக, இந்தப் போர் தொடங்கியதற்கு ட்ரம்ப் பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார். ஒரு கட்டத்தில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
BREAKING: TRUMP BLAMES PETE HEGSETH FOR THE IRAN WAR:
— 🇺🇲 USA ARMY NEWS (@USAArmyNews) March 23, 2026
"Pete, I think you were the first one to speak up. You said, 'Let's do it.'"
.... Show more pic.twitter.com/1Hga29Ltqc
மற்றொரு சந்தர்ப்பத்தில், தெஹ்ரான் மீதான வான்வழித் தாக்குதல்களை, ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தவிர்ப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அவர் விவரித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |