ஈரான் மீது பாரிய தாக்குதல் திட்டம்! ட்ரம்பின் கருத்தால் அதிர்ச்சியில் உலக நாடுகள்
அமெரிக்கா சிறிது நேரத்திற்கு முன்பு "ஈரானில் பெரிய போர் நடவடிக்கைகளை" தொடங்கியதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
"ஈரானிய ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானில் உள்ள ஏவுகணைகளை இல்லாமல் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
தாக்குதல் திட்டம்
இதில் மிக பாரிய தாக்குதல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் கடினமான, பயங்கரமான மக்களின் ஒரு தீய குழுவாகும்" என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளார்.
மேலும் அணு ஆயுத பயன்பாட்டை இல்லாது செய்வோம் என்றும் அமெரிக்க இராணுவத்தின் பலத்தை ஈரான் இதன் பின்னர் விளங்கிக்கொள்ளும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தாக்குதல்கள் இஸ்ரேலுடன் இணைந்து நடத்தப்படுகின்றன என்பதை அவர் குறிப்பிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |