ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் திருப்தி இல்லை! ட்ரம்ப் திட்டவட்டம்
வார இறுதியில் ஒரு உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தபோதிலும், அதை எட்டுவதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
"ஈரான் மிகவும் உறுதியாக உள்ளது, அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய மிகவும் விரும்புகிறார்கள். இதுவரை அவர்களால் அதை எட்ட முடியவில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதில் எங்களுக்கு திருப்தி இல்லை, ஆனால் விரைவில் திருப்தி அடைவோம். இல்லையென்றால், நாம் இந்தப் பணியை முடித்துவிட வேண்டியிருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று தொடங்கி, ஏப்ரல் மாதம் இடைநிறுத்திய இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்த அச்சுறுத்தல்களை அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவுத் திட்டத்தில், ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவது, ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்தை மீட்டெடுப்பது மற்றும் வளைகுடாவிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது ஆகியவற்றுக்கான உறுதிமொழிகள் அடங்கியுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி புதன்கிழமை முன்னதாகத் தெரிவித்தது.
எனினும் அந்த அறிக்கை முற்றிலும் புனையப்பட்டது என வெள்ளை மாளிகை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |