தவெகவிற்கு பேரிடி - காலை வாரும் திருமாவளவன்! மு.க. ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற முடியாமல் திணறி வருகிறது.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு 116 இடங்கள் வரை தவெக உறுதி செய்திருந்தாலும், இன்னும் 2 இடங்கள் கிடைக்காததால் ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.
இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் திருமாவளவன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
திமுக கூட்டணி
முன்னதாக கம்யூனிஸ்டுகள் முடிவை பின்பற்றுவேன் என்று திருமாவளவன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தாலும், தற்போது வரை அவர் மௌனம் காத்து வருவது தவெகவினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி அமைக்கத் தேவையான அந்த 2 இடங்களை விசிகவிடம் இருந்து விஜய் எதிர்பார்த்திருந்தார்.
கம்யூனிஸ்டுகள் தவெகவிற்கு ஆதரவு அளித்த நிலையிலும், திருமாவளவன் மட்டும் ஸ்டாலினைச் சந்திப்பது, அவர் மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடரப்போகிறார் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக கூறப்படுகிறது.இது நடந்தால், விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும்.
விஜய்யின் பதவியேற்பு விழா
ஐயுஎம்எல் ஏற்கனவே தவெகவிற்கு ஆதரவு இல்லை என அறிவித்துவிட்ட நிலையில், தற்போது விசிகவும் பின்வாங்குவது விஜய்யின் பதவியேற்பு விழாவை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அதன்படி, நாளை விசிக தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கும் வரை, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இந்த இழுபறி தொடரும் என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |