உக்ரைனில் பிடிபட்ட இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை-ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப்படை அறிவிப்பு(காணொலி)
பிரித்தானிய போர் வீரர்களுக்கு மரண தண்டனை
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரில் பங்குபற்றிய இரண்டு பிரித்தானிய போர் வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக ரஷ்ய ஆதரவு பெற்ற டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்தே பல்வேறு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவிற்கு எதிராகவும் போரில் கலந்து கொள்ள தன்னார்வலர்களாக முன்வந்தனர்.
அந்தவகையில், பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள நெவார்க்கைச் சேர்ந்த ஐடன் அஸ்லின்(28)Aiden Aslin மற்றும் பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த ஷான் பின்னர்(48)Shaun Pinner இருவரும் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டனர்.
ஆனால் இருவரும் ரஷ்ய படைகளிடம் பிடிபட்டு சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் மேற்கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
British citizens Aiden Aslin and Shaun Pinner, and Moroccan national Saadoun Brahim, all of whom fought on contract with Ukraine’s military, have been sentenced to death by the Kremlin’s puppet authorities in Donetsk in show trial that lasted mere days. They were not mercenaries. pic.twitter.com/QYGOEkHXHE
— Christopher Miller (@ChristopherJM) June 9, 2022
இந்தநிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த இராணுவ மோதலில், உக்ரைன் சார்பாக போரிட்ட இரண்டு பிரித்தானிய வீரர்களுக்கு ரஷ்ய ஆதரவு பெற்ற டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை அளித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது என ரஷ்யாவின் RIA Novosti செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த தன்னார்வல போர் வீரர் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் கண்டனம்
பிரித்தானியர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையால் பிரித்தானிய அரசாங்கம் "ஆழ்ந்த கவலையில்" இருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் தகவல்கள் தெரிவிக்கின்றன. "போர்க் கைதிகளை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்" என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
"ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் போர்க் கைதிகள் போர் எதிர்ப்பு சக்திக்கு தகுதியுடையவர்கள் மற்றும் அவர்கள் விரோதப் போக்கில் பங்கேற்றதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரக்கூடாது. "எனவே, உக்ரேனிய ஆயுதப் படைகளில் பணிபுரியும் மற்றும் போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு பிரித்தானிய நாட்டினரையும் விடுவிக்க உக்ரேனிய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நீதிமன்றத் தீர்ப்பு "முழுமையான சட்டப்பூர்வமற்ற தீர்ப்பு" என்று வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ரஷ்ய செய்தி நிறுவனமான TASS வெளியிட்டுள்ள தகவலில், தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது.

