தமிழர் பிரதேசத்தில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவரை காணவில்லை!
திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவரை காணவில்லை என கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் மாயமாகியுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் வட்டாரம் 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இருவரை காணவில்லை
இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் இன்று (23) வரை கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடற்றொழிலாளர்களை தேடி சல்லி பிரதேச கடற்றொழிலாளர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இவர்களை தேடி சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/e95b035f-4b08-4952-955f-402d50027104/24-664ef87d3f086.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/db41a077-8e9e-44ad-a43f-8696690a6b19/24-664ef87dbb38f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cfe7e9bc-a179-4d55-b27d-37d84102cdde/24-664ef87e4a310.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2d7c05c2-83ad-4667-a277-5d689029ad85/24-664ef87eb8986.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)