ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான ஈரானியர்கள்!
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 1,262 ஈரானியப் பிரஜைகள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தைத் துபாயில் உள்ள ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆர்மீனியா வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு தாயகம் சென்றுள்ளனர்.
ஈரானியக் குடியிருப்பு
இதற்கிடையில் ஈரானியக் கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்கள் இனி துபாய் சர்வதேச விமான நிலையத்தைப் போக்குவரத்து மையமாகவோ (Transit) அல்லது அங்கிருந்து பயணங்களை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது முறையான ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பு அனுமதி (Residency Permit) அல்லது சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என ஈரானிய தொழிலாளர் செய்தி நிறுவனம் (ILNA) தெரிவித்துள்ளது.

அத்தோடு தற்போது அமீரகத்திற்கு வெளியே இருக்கும் ஈரானியக் குடியிருப்புதாரர்கள் மீண்டும் அங்கு திரும்புவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான ஈரானியப் பிரஜைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மிகக் குறைந்த அளவிலான விலக்குகள் மட்டுமே முன் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்