பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள 31 பேர்
சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தல்
பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் ருவண்டாவிற்கு அழைத்துச் செல்ல லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைந்து புகலிடம் கோரியவர்களை அடுத்த வாரம் ருவாண்டாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதனை தடுப்பதற்கான தடை உத்தரவைக் கோரி லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
புகலிடக் கோரிக்கையாளர்களை கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக தொண்டு நிறுவனங்களும் ஒரு தொழிற்சங்கமும் இணைந்து மனுவை தாக்கல் செய்திருந்தன. குறித்த மனுவை நேற்றையதினம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி
இதனால் எதிர்வரும் செவ்வாய்கிழமை அகதிகளை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் பிரித்தானியாவில் இருந்து ருவண்டாவிற்கு பயணிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் நாளை மறுதினம் திங்கட்கிழமை புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படகிறது.
முதற்கட்டமாக 31பேர் ருவண்டாவிற்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.