நட்பு நாடுகளுக்குப் பிரித்தானியா புகலிடம்: ஈரானியத் தாக்குதல்கள் முறியடிப்பு
மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் பிரித்தானிய விமானப்படை (RAF) வீரர்கள் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் சுமார் 900 மணித்தியாலங்கள் வான்வழிப் பறப்புகளில் ஈடுபட்டுள்ளதாக டௌனிங் ஸ்ட்ரீட் (Downing Street) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலியின் கூற்றை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று இரவு இஸ்ரேல், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய தாக்குதல்களை முறியடிக்கப் பிரித்தானியா தீவிரமாகப் பணியாற்றியுள்ளது.
பிரித்தானியாவின் நலன்
கடந்த ஒரு மாதகாலமாக இப்பிராந்தியத்தில் உள்ள பிரித்தானியாவின் நலன்களையும் அதன் நட்பு நாடுகளையும் ஈரானியத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக வான்படை வீரர்கள் இத்தகைய தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நட்பு நாடுகள் மீதான வான்வழி அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கும் பிரித்தானியா தனது இராணுவப் பங்களிப்பைத் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த நடவடிக்கை வெளிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |