மத்திய கிழக்கிலுள்ள பிரித்தானியர்களுக்காக தயாரான விமானம்! வெளியான முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்து அரசாங்கம் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற விரும்பும் பிரித்தானிய குடிமக்களுக்கு உதவுவதற்காக, துபாயிலிருந்து ஒரு வர்த்தக (commercial) விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறப்பு விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் புறப்படவுள்ளதாகவும் விமான இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய குடிமக்கள், அவர்களின் துணைவர் அல்லது வாழ்க்கைத் துணை, மேலும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் இந்த சேவைக்கு பதிவு செய்யலாம். இதற்காக அவர்கள் அந்நா்டடு அரசாங்கத்தின் gov.uk இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விமான சேவைகள்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் பதிவு செய்தவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு டிக்கெட் வழங்கும். அவசர மருத்துவ தேவைகள் போன்ற காரணங்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் மிகவும் அவசரமான நிலைமையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகமான பிரித்தானிய குடிமக்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் வகையில், விமான சேவைகளின் அளவை அதிகரிக்க வர்த்தக விமான நிறுவனங்களுடன் இணைந்து அரசு பணியாற்றி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, மக்கள் பாதுகாப்பாக திரும்பிச் செல்ல புதிய விமான பாதைகளை கண்டறியவும் விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |