ரஷ்யாவுடன் தொடர்பு - பிரபல தொழிலதிபர் உக்ரைனில் கைது
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் விமான இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான மோரர் சிச்-ன் பணிப்பாளர் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ் சனிக்கிழமையன்று உக்ரைன் இராணுவ அதிகாரிகளால் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது உக்ரைன் தொழிற்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மோரர் சிச்-ன் பணிப்பாளராக இருக்கும் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ் வயது 83. இவர் உக்ரைன் நாட்டின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் அதிகரித்து வர பல்வேறு நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்தது. இதில் முக்கியமாக ரஷ்யாவுக்கும், ரஷ்யாவின் போருக்கு ஆதரவாக இருக்கும் பல உக்ரைனியர்களைக் கண்காணித்து வந்தது.
தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது
அப்படி உக்ரைன் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர் தான் மோரர் சிச்-ன் பணிப்பாளராக இருக்கும் வியாசெஸ்லாவ் போகஸ்லேவ். ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த காரணத்தாலும், உக்ரைன் மற்றும் உலக நாடுகளின் தடையை மீறி ரஷ்ய இராணுவத்திற்கு இயந்திரம் வழங்கிய காரணத்திற்காகவும், தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் Zaporizhzhia நகரத்தில் இருக்கும் தனது வீட்டில் தங்கியிருந்த 83 வயதான வியாசெஸ்லாவ் போகஸ்லேவ், இராணுவ அதிகாரிகள் தனது வீட்டிற்குள் சோதனை செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில், இராணுவ அதிகாரிகள் கதவை உடைத்து கைது செய்துள்ளனர்.
முன்னரும் பிரபல அரசியல்வாதி கைது
வியாசெஸ்லாவ் போகஸ்லேவ்-க்கு முன்பு அரசியல்வாதியும் தொழிலதிபருமான விக்டர் மெட்வெட்சுக் (Viktor Medvedchuk) இதேபோல் ரஷ்ய தொடர்பு இருப்பதாகக் கூறி மொஸ்கோவிற்குத் தப்பிச் செல்ல முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.