இரு நாடுகளுக்கிடையிலான உக்கிர போரையடுத்து பெலாரஸ் சென்றடைந்துள்ள உக்ரைன் குழு!
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரசில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய இராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
