மீண்டும் அதிகரிக்கும் தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
பொதுச்செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவரது ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ தீர்வும் கிடையாது
அந்த ஊடக அறிக்கையில், "பொதுமக்களின் உயிரிழப்புகளை பொதுச்செயலாளர் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொதுமக்களின் மரணங்கள் குறித்து அவர் மிகுந்த கவலை கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

லெபனானில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்கு "பாரிய அச்சுறுத்தலை" ஏற்படுத்துவதாகவும் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மோதல்களை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த மோதலுக்கு எந்தவொரு "இராணுவ தீர்வும்" கிடையாது என்பதையும் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தயார் நிலையில் அமெரிக்க படைகள்...! போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |