சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் சிறை கைதிகள்!
காலி மாவட்டத்தில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்புடன் கூடிய பூஸ்ஸ சிறைச்சாலையில் குற்றவாளி ஒருவர் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாகவும் வசதியாகவும் இருக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காணொளியில், குறித்த கைதி தனது கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டும், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் காட்சியுடன், மற்றொரு கைதி அவருக்குத் தலையை மசாஜ் செய்யும் காட்சியும் பதிவாகியுள்ளது.
அண்மைய தினங்களாக போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் பாவனை குற்றச்சாட்டுகளின் கீழ் நாட்டில் கைது செய்யப்பட்டு வரும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குள் சுகபோகத்துடன் வாழ்வதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்த வருகின்றன.
சிறைச்சாலைகள் திணைக்களம்
குறித்த சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த காலங்களாக கைதிகளிடமிருந்து தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே, தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |