வெளிச்சத்திற்கு வந்த தகவல்-நாடாளுமன்றில் பெரும் நெருக்கடிக்குள் சிக்கவுள்ள பொறிஸ் ஜோன்சன்!

boris johnson party parliament prime minister united kingdom
By Kalaimathy Jan 26, 2022 09:10 AM GMT
Report

பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலதிக கேள்விகளை பிரதமர் பொறிஸ் ஜோன்சனிடம் முன்வைக்கவுள்ளனர்.

இந்த விருந்துபசாரம் தொடர்பிலான சூ கிரேயின் விசாரணை நிறைவடைந்து, அவரின் அறிக்கை இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இந்த விருந்துபசாரங்கள் தொடர்பில் பெருநகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சூ கிறேயின் விசாரணை அறிக்கை வெளியாகவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பிரித்தானிய பிரதமர் அலுவலகம் மற்றும் வைட் ஹோல் ஆகியவற்றில் 2020 ஆம் ஆண்டில் இருந்து கொவிட்-19 விதிமுறைகளின் சாத்தியமான மீறல்கள் குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக காவல்துறை ஆணையாளர் கிறசிடா டீக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வரவேற்றுள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு தேவையான தெளிவை வழங்கும் வகையில் இந்த விசாரணைகள் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரதமர் அலுவலகத்தில் கொரோனா தொற்று வழிகாட்டல் நெறிமுறைகள் மீறப்படவில்லை என பொறிஸ் ஜோன்சனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரங்கள் தொடர்பில் அரச அதிகாரியான சூ கிறே தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே பெரு நகர காவல்துறையினர் பிரதமர் அலுவலக விருந்துபசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனிடையே சூ கிறே தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரதி பெரும்பாலும் இன்று பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர், பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்துபசாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியையும் எதிர்நோக்கியுள்ளார்.

சமூக ஒன்று கூடல்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் பிரதமர் அலுவலகத்தில் விருந்துபாசாரம் நடத்தியமை தொடர்பான சர்ச்சை அடங்குவதற்குள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பிறந்தநாள் ஒன்றுகூடல் தொடர்பான தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025