சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய நாமல்
புதிய இணைப்பு
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிஐடியில் முன்னிலையாகியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத் தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்ற மண்தினு பத்மசிறி பெரேராவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய நாமல், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனடிப்படையில், இன்று (03-02-2026) அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் பதிவு
பத்மேவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆறு சக்திவாய்ந்த அரசியல்வாதிகளும் அடுத்த சில நாட்களில் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்யக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 11 மணி நேரம் முன்