குடியால் கணவன் தற்கொலை!! பிள்ளைகளோடு தனியே தவிக்கும் தாய்
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
அவற்றிலும் வறுமையுடன் மாற வடுக்கள் தரும் வலிகளையும் சுமத்தல் எந்த அளவுக்கு கொடுமையானது என்பது யாவரும் அறிந்ததே.
அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசாங்கம், அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல. ஊடகங்களுக்கும், ஒட்டு மொத்த சமூகத்திற்குமே உண்டு.
வறுமையில் வாழும் குடும்பங்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில் முல்லைதீவு விளாத்திகுளம் வித்தியாபுரத்தில் கணவனை இழந்து பிள்ளைகளோடு தனியே தவிக்கும் தாய் துயரம் அறிந்து அவர்களது தேவைகளை வெளிக்கொணர்கிறது ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' நிகழ்ச்சி
உறவுப்பாலம் - பாகம் 101
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
(WhatsApp / Viber) - +94212030600 / +94767776363

