இந்திய பெருங்கடலில் உருவெடுத்துள்ள நேரடி போட்டி...! இரு வல்லரசுகளின் மோதலில் சிக்கிய இலங்கை
ஈரானின் போர்க்கப்பல் மீதான தாக்குதலும், அதிலுள்ள ஈரானியர்கள் இலங்கையில் தஞ்சமடைந்திருப்பதும் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி அதிகாரப் போட்டியாக மாறியுள்ளது.
பொருளாதார உதவிக்காகச் சர்வதேச நிதி நிறுவனங்களை நம்பியிருக்கும் இலங்கைக்கு, ஈரானிய மாலுமிகளை விடுவிக்கக் கூடாது என்கிற அமெரிக்காவின் எச்சரிக்கை பெரும் ராஜதந்திர நெருக்கடியைத் தந்துள்ளது.
தனது பிரஜைகளைப் பாதுகாப்பாக மீட்க இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என ஈரான் அழுத்தம் கொடுப்பது இலங்கையின் எரிபொருள் மற்றும் வர்த்தக உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இரு வல்லரசுகளின் மோதலில் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் இலங்கை அரசு ஓர் இக்கட்டான அரசியல் சுழலில் சிக்கியுள்ளது.
இலங்கையின் இந்த ஒரு முடிவு, தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கும் ஈரானின் தார்மீகப் பலத்திற்கும் இடையிலான சமநிலையைத் தீர்மானிக்கும் காரணியாகப் பார்க்கப்படுகின்ற நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய News Insight தமிழ்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |