ஈரானுக்கு எதிரான போரைத் தொடர அமெரிக்காவிடம் குவிந்துள்ள பெரும் பணம்!
ஈரான் மீதான போரைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான ஏராளமான பணம் அமெரிக்க அரசிடம் கையிருப்பில் உள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போருக்கான நிதி
மேலும் தெரிவித்த அவர், இந்தப் போருக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்க மக்கள் மீது புதிய வரிகளைச் சுமத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தைப் போலவே தற்போதும் இராணுவத்தை அதீத வலிமையுடன் வைத்திருப்பதை உறுதி செய்து வருவதாகப் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.

பென்டகன் கோரியுள்ள 200 பில்லியன் டொலர் கூடுதல் வரவுசெலவுத் திட்டம், இராணுவத்தின் எதிர்காலத் தேவைகளுக்கானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும், ஏற்கனவே பாதுகாப்புத் துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மேலதிக நிதிக்கோரிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சில குடியரசுக் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |