வெடுக்குநாறி மலையா..! பர்வத விகாரையா..! வெடித்த புதிய சர்ச்சை

Sri Lankan Tamils Vavuniya Hinduism Sonnalum Kuttram
By Vanan Mar 26, 2023 06:00 PM GMT
Report

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த பகுதியை பௌத்த தொல்பொருள் இடமாக மாற்றும் முயற்சிகள் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதி கூகுல் வரைபடத்தின் மூலம் பௌத்த விகாரையாக பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான விவரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை ஐ.பி.சி தமிழ் மேற்கொண்ட ஆய்வில் பகிரங்கமாகியுள்ளது.


வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் கோவில் அமையப்பெற்றுள்ளது.

எனினும் குறித்த பிரதேசம் பௌத்த சிங்களவர்களுக்கு சொந்தமான பகுதி என பிரஸ்தாபிக்கப்பட்டு, பௌத்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பகிரங்கமானது.

இதன் ஒரு பகுதியாக ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதி, ஒரு பௌத்த விகாரை என இணைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றமை பகிரங்கமாகியுள்ளது.

வட்டவடிவான பாறை விகாரை எனப் பொருள்படும் வகையில் “வட்டமான பர்வத விஹாரய” என கூகுல் வரைபடத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூகுல் வரைபடம்

வெடுக்குநாறி மலையா..! பர்வத விகாரையா..! வெடித்த புதிய சர்ச்சை | Vedukkunari Malai Waddamana Parwatha Viharaya

இந்த விகாரை குறித்த விவரணங்களும், கூகுல் வரைபடத்தில் சிலர் பதிவு செய்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இந்த விகாரை அநுராதபுர காலத்து விகாரையுடன் தொடர்புடையது என்ற வகையில் விவரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த பிரதேசம் பௌத்த சிங்கள மக்களின் பூர்வீக நிலம் என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் இரகசிய முறையில் செய்யப்பட்டு வருகின்றமை புலனாகின்றது.

விக்கிரகங்கள் உடைப்பு

வெடுக்குநாறி மலையா..! பர்வத விகாரையா..! வெடித்த புதிய சர்ச்சை | Vedukkunari Malai Waddamana Parwatha Viharaya

இந்த நிலையில் தான் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு புதருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளமை தமிழ் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி காவல்துறையினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்த வருடம் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டதுடன், குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெடுக்குநாறி மலையா..! பர்வத விகாரையா..! வெடித்த புதிய சர்ச்சை | Vedukkunari Malai Waddamana Parwatha Viharaya

இந்த நிலையில் இன்று காலை ஆலயத்திற்கு சென்ற கிராம மக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு உடைத்தெறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டுள்ளது.

அத்துடன் பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வவுனியா வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் இன்று கவனயீர்ப்பு ஒன்றை செய்திருந்தனர்.

வெடுக்குநாறி மலையா..! பர்வத விகாரையா..! வெடித்த புதிய சர்ச்சை | Vedukkunari Malai Waddamana Parwatha Viharaya

போராட்டத்திற்கு அழைப்பு

மாலை 5.30 அளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த கவனயீர்ப்பை செய்திருந்தனர்.

இதன் போது வெடுக்குநாறி எங்கள் சொத்து, வெடுக்குநாறியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாறியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தை கண்டித்து வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் நாளைய தினம் பாரிய போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023