இலங்கையை வந்தடைந்த இந்திய துணை ஜனாதிபதி
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (19) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதியுடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்திய விமான சேவைக்குச் சொந்தமான 'INDIA - 01' ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் நாளையதினம் (20.04.2026) வரை தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தையிட்டி காணி அளவீட்டுக்கு நாள் குறித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
சிறப்பான வரவேற்பு
இந்தநிலையில் விமான நிலையத்தில் வைத்து அவருக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் குமார கமகே உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
Vice President of India Shri C. P. Radhakrishnan arrived in Colombo on a two-day official visit to Sri Lanka and was accorded a warm welcome. This is the first official bilateral visit by an Indian Vice President to Sri Lanka, aimed at further strengthening the millennia-old… pic.twitter.com/tgEvmnhwmA
— Vice-President of India (@VPIndia) April 19, 2026
மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், அரசியல் பிரதிநிதிகளோடு அவர் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |