பாதுகாப்பற்ற தொடருந்து கடவை தொடர்பாக விபத்து விழிப்புணர்வு பதாகை! யாழில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டம்
விழிப்புணர்வு பதாகை
பாதுகாப்பற்ற தொடருந்து கடவை தொடர்பாக விபத்து விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து மக்களை பாதுகாப்பற்ற தொடருந்து கடவை தொடர்பாக விழிப்புணர்வு அடைய செய்யும் நோக்குடன் "விபத்து விழிப்புணர்வு பதாகை" யாழ் மாநகர சபை அனுமதியுடன் காட்சிப்படுத்தப்பட்டது.
குறித்த விபத்து விழிப்புணர்வு பதாகையானது யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழகத்தினால் அரியாலை, நெடுங்குளம் வீதியில் உள்ள தொடருந்து கடவைக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டது.
விபத்து புகைப்படங்களுடன் மூன்று மொழிகளில் பதாகை
அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பழைய விபத்து புகைப்படங்களுடன் மூன்று மொழிகளில் உள்வாங்கப்பட்டுள்ளது.
இச்செயற்திட்டத்தினை யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் திரு.விசுவலிங்கம் மணிவண்ணன் அவர்கள், மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர் திரு.பார்த்தீபன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, செயற்றிட்டம் தொடர்பான கருத்துக்களை யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழக உறுப்பினர்களோடு பகிர்ந்துகொண்டனர்.
