பலத்த காற்று - மழை..! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை
Weather
By pavan
இலங்கையின் காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் இன்று(01) புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி