சடுதியாக குறையவுள்ள கோதுமை மாவின் விலை! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
எதிர்வரும் வாரத்தில் கோதுமை மாவின் விலை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நாடாளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து கிடைக்கும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் ஏற்கனவே 100 கொள்கலன் கோதுமை மா இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய் மற்றும் துருக்கியில் இருந்து இலங்கைக்கு கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாகவும், கடந்த காலங்களில் கப்பல்கள் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கோதுமை மாவின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் மேலும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ரூபாவிற்கும் அதிகமான விலையில் கோதுமைமா விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.