தீயில் கருகிய தமிழர் வரலாறு..!! சிங்கள ஆதிக்கத்தின் மற்றுமொரு கோரம்
அமைதியாக மனிதன் வாழக்கூடிய ஒரு இடமாகவும் சிங்கப்பூர் வியக்கும் அளவுக்கு இருந்துள்ளது இலங்கை தேசம்.
அதுவும் தமிழரின் பகுதிகளுக்கு சிறப்பான வரலாறுகள் கொண்டிருந்தது.
அந்த வரலாற்றில் பொறாமை கொள்ளப்பட்டு - எரிச்சலடைந்த - சினம் கொண்ட சில கும்பலினால் நாட்டின் நிலைமை புரட்டிப் போடப்பட்டது.
யாழ். பொது நூலக எரிப்பு
இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில், இலங்கை முழுவதுமான தமிழரின் வரலாறுகளை - சரித்திரங்களை நூல்களாவும் ஆவணங்களாகவும் பொதிந்து வைத்திருந்த யாழ். பொது நூலகத்தில் நடந்தேறிய கொடூரத்தின் உச்சமே பொது நூலக எரிப்பு.
யூன் கலவரத்தில் காணாமலாக்கப்பட்ட - சாம்பலாக்கப்பட்ட - அழிக்கப்பட்ட ஒரு வரலாற்றின் படிமம் தான் மீண்டும் நினைவூட்டப்படுகிறது இந்த ஆவணப்படுத்தலின் மூலம்.
சற்று பொறுமையோடு இந்த வரலாற்றுப் பதிவை செமடுங்கள். இது ஒரு தமிழனின் - தமிழர்களின் உயிர்முடிச்சு....