மூதூரில் அதிகரிக்கும் காட்டு யானை அட்டகாசம்
Trincomalee
Elephant
Eastern Province
By Independent Writer
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரமாநகர் கிராமத்திற்குள் நேற்று (22) இரவு உட்புகுந்த காட்டு யானை வீடொன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது வீட்டினுள் இருந்த நெல் மூட்டைகளை இழுத்து வீட்டு உடமைகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருந்த பெண் எவ்வித ஆபத்துக்களும் இன்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக காணப்படுவதோடு ,உடமைகளுக்கும் காட்டு யானைகள் சேதம் விளைவித்து வருவதனாலும் இதற்கு உரிய தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத் தர வேண்டும் என மூதூர் வீரமாநகர் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி