பதவி விலகல் தொடர்பில் கோட்டாபயவின் பகிரங்க அறிவிப்பு!!
பதவிக்காலம் நிறைவடையும் வரை பதவி விலகப்போவதில்லை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சர்வதேச ஊடகத்துடனான நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " தோல்வியடைந்த அரச தலைவராக பதவியிலிருந்து விலக முடியாது. எனக்கு 5 வருடங்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நான் பதவி விலகப்போவதில்லை", எனக் குறிப்பிட்டார்.
ஆனாலும் தான் மீண்டும் ஒரு முறை அரச தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அரச தலைவர் கோட்டாபய மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவைப் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்னதாக சென்றிருந்தால், இந்த நிலை வந்திருக்காது என அரச தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.