சர்ச்சையில் சிக்கிய மகிந்தவின் புதல்வர் - தலைதெறிக்க ஓட்டம்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச காணி ஒன்று தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யோசித ராஜபக்ச தனது முன்னாள் காதலி யஸாரா அபேநாயக்கவுடன் காணி ஒன்றை கடந்த காலத்தில் கொள்வனவு செய்துள்ளார். ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விருப்பம் இல்லாமையினால் இக்காதல் தொடர்பு முடிவுக்கு வந்தது.
சர்ச்சையில் சிக்கிய மகிந்தவின் புதல்வர்
ஆனால், 8 வருடங்களுக்கு முன்னர் வேறு ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் இருந்த வீட்டில், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும் போதைப் பொருளுக்கு அடிமையான அவரது மகனும் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில், நாட்டிற்கு வந்த யோசித ராஜபக்ச இரண்டு வாகனங்களில் அடியாட்களுடன் அந்த வீட்டிற்குச் சென்று தந்தையையும் மகனையும் வெளியேற்றுவதற்கு முயற்சித்துள்ளார்.
தலைதெறிக்க ஓட்டம்
எனினும் முன்னாள் இராணுவ அதிகாரி அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார். 8 வருடங்கள் தொடர்ந்து இந்த வீட்டில் இருந்தமையால் அது எங்களுக்கே சொந்தமாகி விடும். முடியும் என்றால் எங்களை சுட்டுக்கொல்லுங்கள் என கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனால் சத்தம் கேட்டு அயலவர்கள் வெளியே வந்தவுடன், வந்த வேகத்திலேயே யோசித உட்பட குழுவினர் அங்கிருந்து சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
