யாழ் விடுதிகளில் சமூகப் பிறழ்வான நடத்தை! சோதனையிட்ட காவல்துறையினர்: சிக்கிய இளைஞர் யுவதிகள்
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
By Kiruththikan
யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெறுகின்ற சமூக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக இன்றைய தினம் யாழ். மாநகரசபை அதிகாரிகளினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது சில விடுதிகளில் சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் சில விடுதிகளில் நடைபெற்ற முறையற்ற விடயங்கள் கவனத்திற்கு எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்