யாழில் அரங்கேறிய கொடூரம்: இளைஞன் அடித்துப் படுகொலை - இருவர் படுகாயம்
யாழில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று (13) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் பதிவாகியுள்ளது.
தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
இது குறித்து மேலும் தெரியவருகையில், ஒரே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முரண்பாடு காணப்படுகிறது. நேற்றிரவு குறித்த முத்துமாரி அம்மன் ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன.

அந்த இடத்திற்கு மூன்று நண்பர்களுடன் வந்த சந்தேகநபர் முரண்பாட்டில் ஈடுபட்டார். இதன்போது குறித்த சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகி பானுஷன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
அதன்பின்னர் சந்தேகநபர் தப்பி செல்ல முயன்ற போது கொலை செய்யப்பட்ட இளைஞர் சந்தேகநபரை பிடிப்பதற்கு முயற்சித்தார்.
இதன்போது சந்தேகநபர் உயிரிழந்த இளைஞன் மீதும் அதே கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொணடார். இதன்போது மயூரன் என்பர் சம்பவம் இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் தனக்கும் காயம் இருப்பதாக கூறி முறைப்பாடு செய்வதற்கு வட்டுக்கோட்டை காவல்துறை நிலையத்திற்கு சென்றுள்ளார்.
கொலை இடம்பெற்றமை தெரியாத காவல்துறையினர் குறித்த நபரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் கொலை இடம்பெற்றமை தெரியவந்த நிலையில் சந்தேகநபரை வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ள நிலையில், காவல்துறை கண்காணிப்பில் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலதிக விசாரணை
இதேவேளை பானுஷனும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில். வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |