திடீரென உயிரிழந்த காவல்துறையினரிடமுள்ள குதிரைகள் - வெளியான காரணம்
சிறிலங்கா காவல்துறை குதிரைப்படை பிரிவுக்கு சொந்தமான 07 குதிரைகள் உணவுப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
35 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான குதிரைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் ஆராய்ந்த போது கடந்த 3 மாதங்களில் மூன்று குதிரைகளே உயிரிழந்துள்ளது. இரண்டு குதிரைகள் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக குதிரைப்படை பிரிவு தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு
எனினும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குதிரைகளுக்கு வழங்கப்படும் சில தீவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இலங்கைக்கு தீவனம் இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், உணவுப் பற்றாக்குறை இருந்தபோதிலும், குதிரைகள் மிகவும் வலுவான காலத்தை கடத்தியதாக காவல்துறை குதிரைப்படை பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
