இலங்கையால் மீட்கப்பட்ட 10 ஈரானிய மாலுமிகளுக்கு தொடர்ந்தும் சிகிச்சை!
மூழ்கடிக்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்து, உயிர் பிழைத்த 10 ஈரான் மாலுமிகள் தற்போது கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
22 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், வெலிசர கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், விபத்தில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள இரண்டு deep-freeze வசதிகளில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
இந்த சம்பவம் IRIS Dena எனப்படும் ஈரான் போர்க்கப்பல், இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மூழ்கிய பெரிய கடல் விபத்துடன் தொடர்புடையதாகும்.

இலங்கை கடற்படைக்கு 4 மார்ச் காலை 5.08 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, கடற்படை மற்றும் விமானப் படை இணைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்டன.
அமெரிக்க தாக்குதல்
இதன்போது 84 உடல்கள் மீட்கப்பட்டதுடன் 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.இந்த மீட்பு நடவடிக்கைகள் கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச மாநாட்டின் உடன்படிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

அதனைதொடர்ந்து, அமெரிக்கா, தங்களின் நீர்மூழ்கிக் கப்பல் அந்த ஈரான் கப்பலை டார்பிடோ தாக்குதல் மூலம் மூழ்கடித்ததாக உறுதி செய்தது.
இந்நிலையில், உயிரிழந்தோரின் உடல்களை கையாளுதல் மற்றும் தாய்நாட்டிற்கு அனுப்புதல் தொடர்பாக ஈரான் மற்றும் சர்வதேச அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |