சிறையில் பெண் மீது பாலியல் வன்கொடுமை - காவல்துறையினருக்கு கிடைத்த கடூழிய சிறைத்தண்டனை
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Sexual harassment
By Sumithiran
பெண் ஒருவரை சிறையில் அடைத்து மோசமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
10 வருடங்கள் கடூழிய சிறை

இது தொடர்பான நீண்ட வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இரண்டு காவல்துறை உத்தியோகத்தரகளையும் குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, அவர்களுக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைதண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார்.
சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

2015 ஆம் ஆண்டு, பெண் ஒருவரை சிறையில் அடைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி