ரஷ்யாவிடம் மண்டியிட்ட உக்ரைன் தரப்பு - சர்வதேச ஊடகங்கள் தகவல்
soldier
russia
ukrain
surrender
By Vanan
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, உக்ரைனிய படைவீரர்கள் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளனர் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக தன்வசமாக்கும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இது ஒருபுறமிருக்க கீவ், கார்கிவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களையும் ரஷ்ய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இன்று மரியுபோல் நகரத்தில் 1,000இற்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி