12 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 61 வயது நூலகர் கைது..!
Police spokesman
Sexual harassment
Sri Lanka Police Investigation
By Kanna
பாடசாலை நூலகத்தில் வைத்து 12 வயது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 61 வயதான நூலகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு திணைக்களம்
7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி புத்தகம் எடுப்பதற்காக நூலகத்திற்குச் சென்ற போது, நூலகப் பொறுப்பாளர் மாணவியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தொலைபேசியில் செய்த முறைப்பாட்டின் பேரில், மொரட்டுவ காவல்துறையினரால் பாடசாலையின் 61 வயதான நூலகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்